ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல் பெரியகுளத்தில் தகனம்


ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல் பெரியகுளத்தில் தகனம்
x
தினத்தந்தி 2 Sep 2021 2:50 PM GMT (Updated: 2 Sep 2021 2:50 PM GMT)

பெரியகுளத்தில் உள்ள நகராட்சி மயானத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல் தகனம் செய்யப்பட்டது.

தேனி,

அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி ப.விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை பெரியகுளத்திற்கு எடுத்து வரப்பட்டு ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம், தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு, இன்று பிற்பகல் 2 மணிக்கு ஊர்லவமாக எடுத்து செல்லப்பட்டு பெரியகுளத்தில் உள்ள நகராட்சி மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. 

உடலுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் மற்றும் தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத் அவரது அம்மாவின் சடலத்திற்கு தீ மூட்டினார்.

Next Story