தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை


தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 3 Sep 2021 12:50 AM GMT (Updated: 3 Sep 2021 12:50 AM GMT)

தாய் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம் பழைய கடலூர் ரோட்டை சேர்ந்தவர் அலமேலு. இவரது 2-வது மகள் ஜோதிகா (வயது 18) பிளஸ்-2 படித்து விட்டு கல்லூரிக்கு செல்ல தயாராக இருந்தார்.
இவர் தாயாரின் செல்போனை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தார். இதுபற்றி அலமேலு பலமுறை கண்டித்தும் செல்போன் பார்ப்பதை ஜோதிகா நிறுத்திக்கொள்ளவில்லை.
சம்பவத்தன்று ஜோதிகாவிடம் இருந்து செல்போனை பறித்ததுடன் மகளை அலமேலு திட்டினார். இதனால் மனமுடைந்த ஜோதிகா வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story