சென்னை அருகே கோர விபத்து: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி


சென்னை அருகே கோர விபத்து: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி
x
தினத்தந்தி 5 Sep 2021 1:25 AM GMT (Updated: 5 Sep 2021 1:25 AM GMT)

சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.

சென்னை, 

சென்னை - திருச்சி சாலையில் தாம்பரத்தில் இருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததால், இரும்பு கம்பிகளுடன் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தகவல் அறிந்து சம்பவ நடத்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story