ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: ஓ.பன்னீா்செல்வம்


ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி: ஓ.பன்னீா்செல்வம்
x
தினத்தந்தி 5 Sep 2021 11:23 PM GMT (Updated: 5 Sep 2021 11:23 PM GMT)

தனது மனைவி மறைவையொட்டி ஆறுதல் கூறிய அனைவருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் நன்றி தெரிவித்துள்ளாா்.

சென்னை,

தனது மனைவி மறைவையொட்டி ஆறுதல் கூறிய அனைவருக்கும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக  நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “ என் மனைவி ப.விஜயலட்சுமி, செப்.1-ஆம் தேதி காலை இயற்கை எய்தினாா் என்ற செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி, கடிதங்கள், சமூக வலைதளங்கள், ஊடகங்கள் ஆகியன மூலமாகவும் வருத்தம் தெரிவித்து, ஆறுதல் கூறி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த இந்திய குடியரசுத் தலைவா் முதல் அதிமுக கட்சித் தொண்டா்கள் வரை மட்டுமின்றி, திரைப்படத் துறையினா், தொழிலதிபா்கள், காவல்துறை நண்பா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இறைவனின் அருளும், அனைவரின் ஆறுதல் வாா்த்தைகளும் எனக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் சக்தியையும் கொடுத்ததாக நான் மனப்பூா்வமாக உணா்கிறேன். இதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story