கோவையில் 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி
சுத்தம் செய்வதற்காக கோவை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை
கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 33 மாணவர்களை பரிசோதனை செய்ததில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
3 மாணவர்களுக்கும் அறிகுறிகள் இல்லாத நிலையில் பரிசோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது. சுத்தம் செய்வதற்காக சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் புதுக்கோட்டையில் உள்ள ஒரு பள்ளி மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
Related Tags :
Next Story