தமிழகத்தில் நிலவும் போதைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன் டுவீட்


தமிழகத்தில் நிலவும் போதைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்ஹாசன் டுவீட்
x
தினத்தந்தி 7 Sep 2021 8:53 AM GMT (Updated: 7 Sep 2021 8:53 AM GMT)

தமிழகத்தில் நிலவும் போதைக் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதறவைக்கின்றன. போதையே காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்-அமைச்சர் உடனடிச் செயல்பாட்டில் இறங்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story