திருவண்ணாமலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், கடந்த 1ந்தேதி முதல் அரசு, அரசு உதவி பெறும், தனியார் உள்ளிட்ட பள்ளிகளை திறக்க முடிவு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
இதனை தொடர்ந்து, மாணவ மாணவியர்கள் பள்ளிகளுக்கு மீண்டும் வர தொடங்கியுள்ளனர். எனினும், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
இந்த சூழலில், பல்வேறு மாவட்டங்களிலும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story