விநாயகர் சதுர்த்தி கோரிக்கை நிராகரிப்பு!- சென்னை ஐகோர்ட்டு


விநாயகர் சதுர்த்தி கோரிக்கை நிராகரிப்பு!- சென்னை ஐகோர்ட்டு
x
தினத்தந்தி 8 Sep 2021 8:10 AM GMT (Updated: 8 Sep 2021 8:13 AM GMT)

விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிப்பு என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை

கொரோனா நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இதற்கு பா.ஜ.க. இந்து முன்னணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து திருவள்ளூரைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா காலத்தில் பொதுநலனை கருத்தில் கொண்டே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. இதனையடுத்து விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும், நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

Next Story