போக்குவரத்து கழகத்துக்கு 2,200 புதிய பஸ்கள் சட்டசபையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு


போக்குவரத்து கழகத்துக்கு 2,200 புதிய பஸ்கள் சட்டசபையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Sep 2021 10:13 PM GMT (Updated: 8 Sep 2021 10:13 PM GMT)

போக்குவரத்து கழகத்துக்கு 2,200 புதிய பஸ்கள் சட்டசபையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று மாலை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களை நவீனமாக்கும் பொருட்டு ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் புதிதாக பி.எஸ்.-6 குறியீட்டிற்கு இணக்கமான 2,213 டீசல் பஸ்கள் கொள்முதல் செய்யப்படும்.

அரசு போக்குவரத்து நிறுவனங்களின் கட்டிடங்களின் கூரையில் சூரியசக்தி மின்னாற்றல் தகடுகள் நிறுவப்படும். காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆதார் அட்டையை ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே போக்குவரத்து சேவைகளான பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுனர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும்.

திருவள்ளூர மாவட்டம், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு ரூ.30 கோடியே 21 லட்சம் செலவில் சொந்த கட்டிடம் கட்டப்படும். மதுரை மாவட்டம், மதுரை (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சொந்த கட்டிடமும், ஓட்டுனர் தேர்வு தளமும் ரூ.52.80 கோடி செலவில் கட்டப்படும். கோவை மாவட்டம், கோவை (வடக்கு) வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ரூ.49.80 கோடி மதிப்பில் சொந்த கட்டிடம் கட்டப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story