14, 15ம் தேதிகளில் தமிழ்நாடு,புதுச்சேரியில் கனமழை இந்திய வானிலை மையம் எச்சரிக்கை


14, 15ம் தேதிகளில் தமிழ்நாடு,புதுச்சேரியில் கனமழை இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Sep 2021 9:46 AM GMT (Updated: 11 Sep 2021 9:46 AM GMT)

14, 15ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வரும் 14, 15ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story