மக்கள் விரும்பாத பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க கட்டாயப்படுத்த மாட்டோம்: அமைச்சர் கே.என்.நேரு


மக்கள் விரும்பாத பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்க கட்டாயப்படுத்த மாட்டோம்: அமைச்சர் கே.என்.நேரு
x
தினத்தந்தி 11 Sep 2021 10:04 PM GMT (Updated: 11 Sep 2021 10:04 PM GMT)

திருச்சியில் நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி அதற்கான தேதியை நாளை (திங்கட்கிழமை) அறிவிப்பார். தமிழகத்தில் 30 நகராட்சியும், 6 மாநகராட்சியும் அதிகரித்துள்ளன. வார்டு மறுவரையறை செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சில ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைக்கும் திட்டம் உள்ளது. அதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு ஒத்துக்கொள்ளப்பட்டு கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார்கள். ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க விருப்பம் இல்லை என்றால், கட்டாயப்படுத்த மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story