சென்னை விமான நிலையத்தில் ரூ.1.33 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,
சென்னை விமான நிலையத்திற்கு, அதிகாலை 2:30 மணிக்கு வந்த 34 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி மற்றும் காலை 4 மணிக்கு வந்த 35 வயது ஆண் பயணி ஆகியோா் விமான நிலைய வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் அவா்களது உடைமைகளை சோதனையிட்டபோது பைகள், பெட்டிகளின் உள்ளே ரூ.1.33 கோடி மதிப்பில் 3,125 கிராம் எடையில் 11 தங்க கம்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், 2 பயணிகளையும் கைது செய்து, தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அலுவலகம், வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர், இதில் கணக்கில் வராத 9 லட்சம் ரொக்கம் ரூ.1 கோடி ஆவணங்கள், 50 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.