இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவு
நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது.
சென்னை,
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 1.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் இணைந்து தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் முதன் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
Related Tags :
Next Story