மெகா தடுப்பூசி முகாம்; இரவு 8:30 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு


மெகா தடுப்பூசி முகாம்; இரவு 8:30 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2021 2:30 PM GMT (Updated: 12 Sep 2021 2:30 PM GMT)

கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ள மையங்களில் இரவு 8.30 மணி வரை தடுப்பூசிகள் செலுத்தபடும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் சுமார் 40,000 முகாம்கள் மூலம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி இலக்கான 20 லட்சத்தை தாண்டி தற்போது வரை 24 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

7 மணி மேல் ஆகிவிட்டால் தடுப்பூசி செலுத்த வருபவர்கள் திருப்பி அனுப்ப மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ள மையங்களில் 8:30 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாமில் தற்போது வரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தி சாதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story