தமிழகத்தில் மேலும் 1,608 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் மேலும் 1,608 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 22 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Sep 2021 2:38 PM GMT (Updated: 12 Sep 2021 2:38 PM GMT)

தமிழகத்தில் இன்று 1,608 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1,55,807 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,608 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 33 ஆயிரத்து 839ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவில் இருந்து மேலும் 1,512 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 25,82,198 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 16,473 ஆக உள்ளது.

கொரோனாவால் மேலும் 22 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,168 ஆக உயர்ந்துள்ளது.  அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்தனர்.

செங்கல்பட்டில் 120 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 113 ஆக குறைந்தது.  ஈரோட்டில் 151 ஆக இருந்த ஒருநாள் கொரொனா பாதிப்பு தற்போது 160 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் 224 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 212 ஆக குறைந்து உள்ளது. தஞ்சையில் 117 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 115 ஆக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story