உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் - அதிமுக அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தலுக்கான கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில், 6,10.2021, 9,10.2024 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,
தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, மாவட்டம் வாரியாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள் பொறுப்பாளர்களுடன், கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நத்தம் இரா. விசுவநாதன் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் சேவூர் இராமதாசந்திரன் எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் முக்கூர் இராமச்சந்திரன் வேலூர் மாவட்ட கூடுதல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி மற்றும் முன்னாள் அமைச்சர் இரா. கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜேந்திரன் ஆகியோர் திருநெல்வேலி மாவட்ட கூடுதல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி, தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story