தமிழகத்தில் சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு: புதிதாக 1,591 பேருக்கு தொற்று


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Sep 2021 1:45 PM GMT (Updated: 14 Sep 2021 2:02 PM GMT)

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,580-இல் இருந்து 1,591 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 1,591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,37,010 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 27 பேர் (அரசு மருத்துவமனை 20, தனியார் மருத்துவமனை - 7) கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,217 ஆக உயர்ந்துள்ளது. 

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,537 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,85,244  ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது 16,549 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 1,52,296 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள்:-

சென்னை - 212, கோவை - 201, ஈரோடு - 128, தஞ்சாவூர் - 119, செங்கல்பட்டு - 116

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story