தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் கவர்னராக மாற்றப்பட்டுள்ளாா். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பன்வாரிலாலை, தமிழக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து கூறினாா். பஞ்சாப்பில் அவருடைய பணி சிறக்கவும் வாழ்த்து தெரிவித்து கொண்டார்.
இதேபோன்று, முன்னாள் அமைச்சா்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி. ஜெயக்குமாா் ஆகியோரும் உடன் சென்று புரோஹித்துக்கு வாழ்த்து கூறினா்.
Related Tags :
Next Story