'தடைகள் உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்!' - மு.க.ஸ்டாலின் டுவிட்


தடைகள் உடைத்து தமிழினம் முன்னேற சூளுரைப்போம்! - மு.க.ஸ்டாலின் டுவிட்
x
தினத்தந்தி 15 Sep 2021 5:44 AM GMT (Updated: 15 Sep 2021 5:44 AM GMT)

'இந்தி திணிப்புக்கெதிராய் பாய்ந்த தமிழ் ஈட்டி' என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அண்ணாவின் பிறந்தநாள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'அன்பால் தமிழ்நாட்டை ஆண்ட பெரியாரின் கொள்கைக் கைத்தடி; ஆயிரமாண்டு ஆரியமாயை பொசுக்கிய அறிவுத்தீ; இந்தி திணிப்புக்கெதிராய் பாய்ந்த தமிழ் ஈட்டி; தில்லிக்குத் திகைப்பூட்டிய திராவிடப் பேரொளி பேரறிஞர் அண்ணாவின் 113-ஆவது பிறந்தநாளில் தடைகள் உடைத்து, தமிழினம் முன்னேறச் சூளுரைப்போம்!’ என தெரிவித்துள்ளார். 

முன்னதாக, அண்ணாசாலை, வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story