தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரிப்பு
கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,591 ஆக பதிவான நிலையில் இன்று 1658- ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை மக்கள் நல்வாழ்வுத்தூறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,658- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 38 ஆயிரத்து 668 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 1,542-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 50 ஆயிரத்து 740 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,636- ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story