திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் நியமனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 Sep 2021 7:01 PM GMT (Updated: 15 Sep 2021 7:01 PM GMT)

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்களாக தமிழகத்தை சேர்ந்த 3 பேரை நியமனம் செய்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக சுப்பாரெட்டி கடந்த ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்டார். அத்துடன் 21 புதிய உறுப்பினர்கள் மற்றும் 3 அலுவல் சார் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் தமிழகத்தை சேர்ந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன துணைத்தலைவர் என்.சீனிவாசன், தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் என்.கண்ணைய்யா மற்றும் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ உத்தரவை ஆந்திர மாநில அரசின் வருவாய் மற்றும் அறநிலையத்துறை வெளியிட்டு உள்ளது.

Next Story