சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 16 Sep 2021 6:36 AM GMT (Updated: 16 Sep 2021 6:36 AM GMT)

சென்னையில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து மருத்துவ கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதேபோன்று கடந்த 1ந்தேதி முதல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை திறப்பது என அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது.  இதனை முன்னிட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.

எனினும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன.  இந்த நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது.




Next Story