ஊரக உள்ளாட்சி தேர்தல்: ம.தி.மு.க.வில் பொறுப்பாளர்கள் நியமனம்


ஊரக உள்ளாட்சி தேர்தல்: ம.தி.மு.க.வில் பொறுப்பாளர்கள் நியமனம்
x
தினத்தந்தி 16 Sep 2021 7:14 PM GMT (Updated: 16 Sep 2021 7:14 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ம.தி.மு.க.வில் பொறுப்பாளர்கள் நியமனம்.

சென்னை,

ம.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து செயலாற்ற காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு அ.கணேசமூர்த்தி எம்.பி., துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சி மன்றக்குழு செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் ஆகியோரும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 2 மாவட்டங்களுக்கு வக்கீல் கு.சின்னப்பா எம்.எல்.ஏ., துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி, அரசியல் ஆய்வு மைய செயலாளர் மு.செந்திலதிபன் ஆகியோரும், நெல்லை, தென்காசி ஆகிய 2 மாவட்டங்களுக்கு டாக்டர் தி.சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., புதூர் மு.பூமிநாதன் எம்.எல்.ஏ., அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர் சே.செவந்தியப்பன், டாக்டர் ஏ.ஆர்.ஆர்.ரகுமான் எம்.எல்.ஏ. ஆகியோரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story