தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்


தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து வருகிற 20ந்தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2021 4:45 AM GMT (Updated: 17 Sep 2021 5:14 AM GMT)

தமிழகம் முழுவதும் வருகிற 20ந்தேதி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. தெரிவித்து உள்ளது.

சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் சட்டங்கள், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம் நடத்த தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி, வருகிற 20ந்தேதி காலை 10 மணியளவில் தி.மு.க. நிர்வாகிகள், தங்களின் இல்லம் முன்பாக கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்டன போராட்டத்தில், கூட்டணி கட்சியினருடன் இணைந்து தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்றும், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசை பாதுகாப்போம் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story