காரைக்காலில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி - 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
காரைக்காலில் உள்ள எமரால்ட் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
காரைக்கால்,
உலகம் முழுவதும் இன்று(செப்டம்பர் 18) சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்துதல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் இணைந்து கடற்கரைகளில் உள்ள பிலாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கடலோர காவல்படை, காவல்துறையினர், நீர்வளத்துறையினர் இணைந்து காரைக்காலில் உள்ள எமரால்ட் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதனை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தொடங்கி வைத்தார். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
Related Tags :
Next Story