திருப்பூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று- 3 நாட்கள் பள்ளி விடுமுறை


திருப்பூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று- 3 நாட்கள் பள்ளி விடுமுறை
x
தினத்தந்தி 20 Sep 2021 5:03 AM GMT (Updated: 20 Sep 2021 5:03 AM GMT)

திருப்பூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்,

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வரும் நிலையில், மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், இன்று திருவாரூர் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அளித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story