ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2021 11:10 PM GMT (Updated: 20 Sep 2021 11:10 PM GMT)

ஒன்றிய கவுன்சிலர்கள் 6 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த காரணத்தினாலும், ஊராட்சி ஒன்றியக்குழு 1-வது வார்டு உறுப்பினர் இ.ஜெகதீஸ்வரன், 3-வது வார்டு உறுப்பினர் பி.எஸ்.அந்தோணி, 4-வது வார்டு உறுப்பினர் கே.மூக்கம்மாள், 5-வது வார்டு உறுப்பினர் ஜி.அறிவழகன், 6-வது வார்டு உறுப்பினர் ஆர்.செல்வி, 7-வது வார்டு உறுப்பினர் எம்.கலைச்செல்வி,

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய மீனவர் பிரிவு செயலாளர் ஆர்.சந்திரசேகரன், உத்தமபாளையம் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை துணை தலைவர் ஆர்.பிரசாத், டி.கெப்புராஜ் ஆகியோர் இன்று (நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கட்சியினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story