தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Sep 2021 11:42 PM GMT (Updated: 20 Sep 2021 11:42 PM GMT)

தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆண்டி அம்பலத்தைவிட 11 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நத்தம் விஸ்வநாதனின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆண்டி அம்பலம் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன், தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். வாக்குப்பதிவுக்கு முன் கடைசி 48 மணி நேரம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்கு அதிகமாக தேர்தல் செலவு செய்துள்ளார்’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.சேஷசாயி நேற்று விசாரித்தார். பின்னர், தேர்தல் ஆணையம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் 6 வாரங்களில் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story