தமிழகத்தில் மேலும் 1,647- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,647- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தின் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: - தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,647- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 48 ஆயிரத்து 688 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,619- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 50 ஆயிரத்து 159 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,993- ஆக உள்ளது. சென்னையில் இன்று 193 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story