பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜர்


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜர்
x

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜர் 1,000-ம் பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

கோவை,

பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு, அருண்குமார் ஆகிய 9 பேரும் கோர்ட்டில் முதல் முறையாக நேரடியாக ஆஜரானார்கள். அவர்களை பலத்த பாதுகாப்புடன் ரகசியமாக சேலம் சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி, ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகலை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து 9 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Next Story