தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னை,
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.34,992-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.4,410-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.35,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதைபோல வெள்ளி விலை கிராமுக்கு 91 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.65.01-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.65,010-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story