"நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு


நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 23 Sep 2021 6:30 AM GMT (Updated: 23 Sep 2021 6:30 AM GMT)

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருப்பத்தூர்,

.திருப்பத்தூரில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.அப்போது பழனிசாமி பேசியதாவது:

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். தி.மு.க., ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும். நீட் தேர்வு விவகாரத்தில், மக்களிடம் பச்சைபொய்யை தி.மு.க., தெரிவித்தது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு; தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை தி.மு.க., ஏமாற்றி வருகிறது. 

அக்கட்சி அறிவித்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000, சிலிண்டர் மானியம் ரூ.100, முதியோர் ஓய்வூதியம் உயர்வு போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? மக்களவை தேர்தலின் போது தி.மு.க., கல்விக்கடன் மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை அளித்தது.

சட்டசபை தேர்தலின் போதும் அதே வாக்குறுதியை அறிவித்தது. தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி என அறிவித்து, அதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்ததால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.

ஓட்டுகளை பெறுவதற்காக பச்சைப் பொய்யை சொல்லி ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார். தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க.,வினர் வாக்குறுதியை அளிப்பார்கள். ஆனால், நிறைவேற்ற மாட்டார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை சொல்லி நிர்வாகிகள் ஓட்டு சேகரிக்க வேண்டும்.  நான் நினைத்திருந்தால் எவ்வளவோ வழக்கு போட்டிருக்கலாம்.

இவ்வாறு பழனிசாமி பேசினார்.

Next Story