கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் பேட்டி


கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 23 Sep 2021 8:17 PM GMT (Updated: 23 Sep 2021 8:17 PM GMT)

கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலங்காயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். இந்த மாவட்டத்தில் மணல் குவாரி என்று ஒன்று இல்லை. அப்படி இருந்தால் ரசீது இருக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குப்போட்டு சிறையில் அடைத்தனர். அப்போது அதனை பழிவாங்கவில்லை என்றார்கள். இப்போது நாங்கள் தொட்டால் பழிவாங்குவதாக கூறுகிறார்கள். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பணியிட மாறுதலுக்கு எவ்வளவு வாங்கினார்கள்?, எத்தனை லட்சம் வாங்கினார்கள்?, என்ன செய்தார்கள்? என்று அரசு ஊழியர்களுக்கும், மக்களுக்கும் தெரியும்.

அ.தி.மு.க.வினர் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story