கோவை மாவட்டதிற்கு ஞாயிறு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு


கோவை மாவட்டதிற்கு ஞாயிறு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Sep 2021 5:31 PM GMT (Updated: 24 Sep 2021 5:31 PM GMT)

கோவை மாவட்டத்தில் ஞாயிறு கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவித்துள்ளார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிறுக்கிழமைகளில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படுவதாக மாவட்ட கலெக்டர் சமீரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில், கோவையில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே கோவை மாவட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். இருப்பினும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

அதே போல, வாடிக்கையாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். மொத்த விற்பனை மார்க்கெட்டுகளில் சில்லறை விற்பனைக்கு அனுமதி இல்லை எனவும், 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்கவும் மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் பொள்ளாச்சி மாட்டுச் சந்தையை பொறுத்தவரை உள்ளூர் வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா பரிசோதனை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி சான்று வைத்திருக்க வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story