சங்கர்ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 5 கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்களுக்கு பதவி உயர்வு
சங்கர்ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 5 கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்கள் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு அரசு உத்தரவு.
சென்னை,
தமிழக காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.க்கள் அந்தஸ்தில் உள்ள 5 பேர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்துள்ளது.
புதிய டி.ஜி.பி.க்கள் 5 பேர் விவரம் வருமாறு:-
1. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால். 2.சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். 3.ஆபாஷ்குமார். 4.டி.வி.ரவிச்சந்திரன். 5.சீமாஅகர்வால்.
இவர்கள் அனைவரும் 1990-ம் ஆண்டு ஐ.பி.எஸ்.அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்கள் ஆவார்கள். தமிழக காவல்துறையில் தற்போது சைலேந்திரபாபு, பிரதீப் வி.பிலீப், சஞ்சய் அரோரா, கரன்சின்கா, பி.கே.ரவி, சுனில்குமார்சிங், ஷகீல்அக்தர், கந்தசாமி ஆகியோர் டி.ஜி.பி.க்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் அரோரா அயல் பணியில் உள்ளார். சைலேந்திரபாபு தலைமை டி.ஜி.பி. என்று அழைக்கப்படுகிறார்.
தமிழக காவல்துறையில் கூடுதல் டி.ஜி.பி.க்கள் அந்தஸ்தில் உள்ள 5 பேர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்துள்ளது.
புதிய டி.ஜி.பி.க்கள் 5 பேர் விவரம் வருமாறு:-
1. சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால். 2.சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன். 3.ஆபாஷ்குமார். 4.டி.வி.ரவிச்சந்திரன். 5.சீமாஅகர்வால்.
இவர்கள் அனைவரும் 1990-ம் ஆண்டு ஐ.பி.எஸ்.அதிகாரிகளாக தேர்வு பெற்றவர்கள் ஆவார்கள். தமிழக காவல்துறையில் தற்போது சைலேந்திரபாபு, பிரதீப் வி.பிலீப், சஞ்சய் அரோரா, கரன்சின்கா, பி.கே.ரவி, சுனில்குமார்சிங், ஷகீல்அக்தர், கந்தசாமி ஆகியோர் டி.ஜி.பி.க்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் அரோரா அயல் பணியில் உள்ளார். சைலேந்திரபாபு தலைமை டி.ஜி.பி. என்று அழைக்கப்படுகிறார்.
Related Tags :
Next Story