தமிழகத்தில் மேலும் 1,657- பேருக்கு கொரோனா


தமிழகத்தில் மேலும் 1,657- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Sep 2021 1:59 PM GMT (Updated: 27 Sep 2021 1:59 PM GMT)

தமிழகத்தில் மேலும் 1,657 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மேலும்  1,657- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: - தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,657- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 58 ஆயிரத்து 923 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,662- ஆகும்.  தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 51 ஆயிரத்து 880- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  தொற்று பாதிப்புடன் 17,261 பேர் சிகிச்சையில் உள்ளனர். 


Next Story