பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம்; 30-ந் தேதி தொடங்குகிறார்


பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம்; 30-ந் தேதி தொடங்குகிறார்
x

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் 30-ந் தேதி முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-

30-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆத்துமாமாந்தூரிலும், மாலை 5 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டிலும் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்கிறார். அக்டோபர் 1-ந் தேதி பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்திலும், மாலை 5 மணிக்கு காஞ்சீபுரம் மாவட்டம் அவலூரிலும், 2-ந் தேதி காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் சுமை தாங்கியிலும், பிற்பகல் 3 மணிக்கு வேலூர் மாவட்டம் பொய்கை சந்தை மைதானத்திலும், மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம் நெக்குந்தி பகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story