பெரம்பலூரில் மாணவிகள் 7 பேருக்கு கொரோனா - தனியார் பள்ளி மூடல்


பெரம்பலூரில் மாணவிகள் 7 பேருக்கு கொரோனா - தனியார் பள்ளி மூடல்
x
தினத்தந்தி 30 Sep 2021 4:18 AM GMT (Updated: 30 Sep 2021 4:18 AM GMT)

பெரம்பலூரில் மாணவிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், தனியார் பள்ளி மூடப்பட்டது.

பெரம்பலூர்,

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடந்து வருகின்றன. மற்ற வகுப்புகளுக்கு நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவிகள் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளி வளாகம் மூடப்பட்டு, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story