நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழி முன்பதிவை ரத்து செய்ய வேண்டும்


நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழி முன்பதிவை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 3 Oct 2021 10:02 PM GMT (Updated: 3 Oct 2021 10:02 PM GMT)

நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழி முன்பதிவை ரத்து செய்ய வேண்டும் சீமான் வலியுறுத்தல்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களில் விற்க இணைய வழியில் முன்பதிவு செய்யவேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே போதிய அளவில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்றி விளைந்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாத இந்த திடீர் உத்தரவு தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டையே வெளிப்படுத்துகிறது.

எனவே இணைய வழி முன்பதிவு முறையில் உள்ள நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு தற்காலிகமாக அந்த முறையைத் தமிழக அரசு திரும்பப்பெறுவதோடு, மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும். மேலும் தமிழக அரசு ஐகோர்ட்டில் வாக்குறுதி அளித்தபடி, தேவைப்படும் இடங்களில் கூடுதலாக நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story