மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் குலாம் நபி ஆசாத் பாராட்டு


மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் குலாம் நபி ஆசாத் பாராட்டு
x
தினத்தந்தி 3 Oct 2021 11:40 PM GMT (Updated: 3 Oct 2021 11:40 PM GMT)

சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும், அவரது தந்தை கருணாநிதியை போல் 18 மணி நேரத்திற்கு மேலாகவும் உழைக்கிறார் என்றும் குலாம் நபி ஆசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அகில இந்திய அளவில் நிலவும் அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசினர்.

அப்போது எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த குலாம் நபி ஆசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நல்லாட்சி

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டேன். அவர் முதல்-அமைச்சர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி. அவர் சிறந்த முதல்-அமைச்சராக செயல்படுகிறார்.

கடுமையான உழைப்பாளி. தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குகிறார். அவருடைய தந்தை கருணாநிதியை போல் 18 மணி நேரத்திற்கு மேலாக உழைக்கிறார். எங்களுக்குள் நீண்ட கால நட்புறவு தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story