ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2 நாட்கள் விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 2 நாட்கள் விடுமுறை - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Oct 2021 1:22 PM GMT (Updated: 5 Oct 2021 1:22 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் 9 ஆம் தேதி அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6 ஆம் தேதி(நாளை) மற்றும் 9 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 14,573 வாக்குச்சாவடிகளில், முதற்கட்டமாக 7,921 வாக்குச்சாவடிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நாளை மற்றும் 9 ஆம் தேதி அண்ணா பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழக வளாக கல்லூரிகள் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

Next Story