தமிழகத்தில் 2- நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 1,500 -க்கு கீழ் குறைவு


தமிழகத்தில் 2- நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 1,500 -க்கு கீழ் குறைவு
x
தினத்தந்தி 5 Oct 2021 1:48 PM GMT (Updated: 5 Oct 2021 1:48 PM GMT)

தமிழகத்தில் 2- நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 1,500 -க்கு கீழ் குறைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,449  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,71,411 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 16 பேர் ( அரசு மருத்துவமனை - 16 பேர்) உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,682 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா சிகிச்சை முடிந்து இன்று மேலும் 1,548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,18,980 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் தற்போது வரை 16,749 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 151 பேருக்கும், செங்கல்பட்டு 113 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று புதிதாக 1 லட்சத்து 46 ஆயிரத்து 735 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story