‘‘உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்’’ வாக்காளர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்


‘‘உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்’’ வாக்காளர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 5 Oct 2021 7:24 PM GMT (Updated: 5 Oct 2021 7:24 PM GMT)

எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைய ‘‘உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள்’’ வாக்காளர்களுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளாட்சிகளை திறம்பட நிர்வகிக்கவும், தன்னலம் கருதாமல் மக்கள் நலனுக்காக பாடுபடுவதற்கும் பெயர் பெற்றவர்கள்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பா.ம.க.வினர் மக்கள் அழைத்தால் ஓடி வந்து உதவுவர். பா.ம.க. பிரதிநிதிகள் அதிகாரத்தை சுவைப்பவர்களாக இருக்காமல், மக்களின் நலனுக்காக அதிகாரத்தை சுமப்பவர்களாக இருப்பார்கள். பா.ம.க.வினர் உள்ளாட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், உங்கள் குறைகள் தீர்ந்து விடும் என்பது உறுதி. எனவே, பா.ம.க.வினருக்கு மாம்பழம் சின்னத்திலும், ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு ஆங்காங்கே ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களிலும் வாக்களிக்க வேண்டுகிறேன். அதன்மூலம் உங்களின் நிகழ்கால குறைகள் களையப்பட்டு எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவது உறுதி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story