ஊரக உள்ளாட்சி தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு


ஊரக உள்ளாட்சி தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு
x
தினத்தந்தி 9 Oct 2021 12:51 PM GMT (Updated: 9 Oct 2021 12:51 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 12 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

சென்னை,

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல்கட்ட தேர்தல் 6-ந் தேதி நடந்து முடிந்தது.  இந்த நிலையில், 2-ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. 

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6 மணிக்கு முன்பு  வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள், அந்தந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளது. 

இதன்பின்னர், 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. 

Next Story