சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை? - ஜெயக்குமார் கேள்வி


சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை? - ஜெயக்குமார் கேள்வி
x
தினத்தந்தி 11 Oct 2021 7:53 AM GMT (Updated: 11 Oct 2021 7:53 AM GMT)

உண்மையான கட்சித் தொண்டர்கள் அதிமுகவை விட்டு வேறு எந்த கட்சிக்கும் செல்லமாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சசிகலா 16-ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்தப் போவதாகவும் 17-ந் தேதியன்று ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு செல்லப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் பிறகு தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது அவர், உண்மையான கட்சித் தொண்டர்கள் அதிமுகவை விட்டு வேறு எந்த கட்சிக்கும் செல்லமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், சிறையில் இருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார். அரசியல் செய்ய வேண்டுமென்பதற்காகவே இதையெல்லாம் செய்வதாகவும் என்ன செய்தாலும் அவர் பின்னால் யாரும் செல்ல மாட்டார்கள் என்றும் அவர் தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்டவர் என்றும் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.



Next Story