பள்ளிகளை திறக்ககோரி சிறுமி கடிதம்: போனில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பள்ளிகளை திறக்ககோரி சிறுமி கடிதம்: போனில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 15 Oct 2021 11:06 AM GMT (Updated: 15 Oct 2021 12:28 PM GMT)

பள்ளிகளை திறக்ககோரி சிறுமி எழுதிய கடிதம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

சென்னை,

முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஓசூர், டைட்டன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த திரு.ரவிராஜன்-திருமதி உதயகுமாரி ஆகியோரின் மகள் செல்வி பிரஜ்னா அவர்கள், பள்ளிகளைத் திறக்கும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார். 

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தொலைபேசி எண்ணிற்கு இன்று (15.10.2021) தொடர்புகொண்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,

நவம்பர் 1-ஆம் நாள் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்படித் திறக்கப்படும்போது அம்மாணவி பள்ளிக்குச் செல்லலாம்-கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியதோடு, ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்துகொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தி, நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

Next Story