புதுக்கோட்டையில் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்
புதுக்கோட்டையில் சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று (சனிக்கிழமை) சசிகலா சென்று பார்வையிட்டு அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே பேச உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக போலீசாரிடமும், அவரது சார்பில் அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் சசிகலாவை வரவேற்கும் விதமான சுவரொட்டிகள் புதுக்கோட்டையில் சில இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளன. இந்த சுவரொட்டி அ.தி.மு.க.வை சேர்ந்தவரின் பெயரால் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சசிகலா அ.தி.மு.க. தொண்டர்களிடம் செல்போனில் உரையாடியபோது புதுக்கோட்டையை சேர்ந்த சிலரிடமும் அவர் பேசினார். அந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் ஏற்கனவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story