இலங்கை கடற்படை கைது செய்துள்ள: தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க எல்.முருகன் நடவடிக்கை
இலங்கை கடற்படை கைது செய்துள்ள: தமிழக மீனவர்கள் 23 பேரை விடுவிக்க எல்.முருகன் நடவடிக்கை வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதினார்.
சென்னை,
நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள 66 மீனவ கிராம மக்களிடம் இருந்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை-பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களுடைய 2 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மீனவ கிராம மக்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்த எல்.முருகன், உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், இலங்கை கடற்படை கைது செய்துள்ள 23 மீனவர்களையும், 2 படகுகளுடன் பாதுகாப்பாகவும், உடனடியாகவும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி வலியுறுத்திய பிரதிநிதிகளிடம், 23 மீனவர்களையும் விரைவில் விடுவிப்பது தொடர்பான விவகாரத்தில் தான் அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுப்பதாக உறுதியளித்தார்.
நாகை, காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையில் உள்ள 66 மீனவ கிராம மக்களிடம் இருந்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, மீன்வளத்துறை, கால்நடை-பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களையும், அவர்களுடைய 2 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மீனவ கிராம மக்களின் கோரிக்கையை கனிவோடு பரிசீலித்த எல்.முருகன், உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், இலங்கை கடற்படை கைது செய்துள்ள 23 மீனவர்களையும், 2 படகுகளுடன் பாதுகாப்பாகவும், உடனடியாகவும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி வலியுறுத்திய பிரதிநிதிகளிடம், 23 மீனவர்களையும் விரைவில் விடுவிப்பது தொடர்பான விவகாரத்தில் தான் அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுப்பதாக உறுதியளித்தார்.
Related Tags :
Next Story