மீனவர் பாதுகாப்பில் உள்ள சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை


மீனவர் பாதுகாப்பில் உள்ள சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 15 Oct 2021 10:20 PM GMT (Updated: 15 Oct 2021 10:20 PM GMT)

மீனவர் பாதுகாப்பில் உள்ள சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு சொந்தமான 3 படகுகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். சிங்கள கடற்படையினரின் இத்தகைய அத்துமீறல் கண்டிக்கத்தக்கதாகும். கொரோனா பரவல் காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல்களை சிங்களை கடற்படை சற்று கைவிட்டிருந்தது. இப்போது மீண்டும் அத்துமீறல்கள் அதிகரித்துவிட்டன.

வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக கரைதிரும்புவதை உறுதிசெய்யும் வகையில் இந்த சிக்கலுக்கு நிரந்தத்தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்காக வங்கக்கடலில் இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் எல்லைகளை கடந்து சென்று மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்பாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும், அவர்களின் 3 படகுகளை மீட்டு வருவதற்கும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story