முதல்-அமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து : பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் கைது


முதல்-அமைச்சர் குறித்து  சர்ச்சை கருத்து : பாஜக பிரமுகர் கல்யாண ராமன் நள்ளிரவில் கைது
x
தினத்தந்தி 17 Oct 2021 7:40 AM GMT (Updated: 17 Oct 2021 7:40 AM GMT)

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கல்யாண ராமன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

சென்னை,

பாஜக பிரமுகரான கல்யாண ராமன், முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோர் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தருமபுரி திமுக எம்.பி குறித்தும் கல்யாண ராமன் டுவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்டார். 

இது தொடர்பாக எம்.பியின் உதவியாளர்  காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், கல்யாண ராமனை கைது செய்ய  போலீசார் சென்னை வளசரவாக்கம் வந்தனர். ஆனால், கல்யாணராமன் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு போலீசாரோடு செல்ல மறுத்தார். இதையடுத்து கல்யாண ராமனை வலுக்கட்டாயமாக போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். இதனால், போலீசாருடன் பாஜக தொண்டர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story